ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நர்சன பேட்டையில் பூ ஹக்கு என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2000 கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, யாராவது ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கட்சியை தொடங்கி வெற்றி பெற்றால் அவரை எம்.ஜி.ஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்லுவார்கள். […]
