சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன் என்று ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்கள் சந்திப்பு என சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டு வருகிறார் சசிகலா. இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கமும் அங்கு வந்திருந்தார்.. இருவரும் சந்தித்து பேசினர். அப்போது […]
