துளசி, கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]
