என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே அருண்குமார், பத்மநாபன், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமராஜ் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீக்காயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் முற்றிலுமாக குணமடைந்து விடுவார்கள் என்று நம்பிக்கை எழுந்த நிலையில் ஒவ்வொருவராக உயிரிழந்திருக்கின்றார்கள். […]
