பெங்களூருவில் இட்லி தயாரித்து விற்பனை செய்வதற்கு ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரம் போல இருக்கும் அந்த எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்து வெளியே வருகிறது. இந்த எந்திரமானது 24 மணிநேரமும் செயல்படுகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த எந்திரத்தை தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் எந்திரத்தை தயாரித்த ஹிரேமத் என்பவர் கூறியதாவது “என் மகளுக்கு சென்ற 2016-ஆம் வருடம் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நள்ளிரவில் இட்லி […]
