பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து வரும் 3ஆம் தேதி தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும். இதற்கிடையே இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. எனவே இம்ரான்கான் கட்சியின் கூட்டணி […]
