பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்தது. முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த கோவில் உண்டியல் நிரம்பிய பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக அதிலுள்ள பணம் பொருள்கள் எல்லாம் எண்ணப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 25ம் தேதியன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. […]
