தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் […]
