தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
