அலுவலகத்தில் ஊழியர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி வரைபடவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது மருதுபாண்டியன் அலுவலகத்தில் வைத்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் மருதுபாண்டியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]
