ஊட்டி நகர் பகுதியில் புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. சென்ற சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகின்றது. மேலும் மனித விலங்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் எச்.பி.எப் பகுதியில் […]
