தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அந்த ஊராட்சியில் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் […]
