Categories
அரசியல்

வரும் 30ஆம் தேதி தெரியும் என்ன நடக்கும்னு ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஜெனிவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க ? செக் வைத்த நீதிமன்றம்… நடுங்கிய மத்திய அரசு …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும் வலக்கை பதிவு செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம்: மருத்துவ நிபுணர் குழு..!!

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு மே31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் குழு சார்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வரலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திரையரங்கு திறப்பது எப்போது ? அமைச்சர் பதில் …!!

நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமைச்சர் நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்பது ஆர்கே செல்வமணி க்கு தெரியும். தயாரிப்பாளர்கள், திரையரங்கம், நடிகர் சங்க பிரதிநிதிகள் பேச ஏற்பாடு செய்தால் அரசு உதவும். கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல கனவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைத்தது ஐசிசி?

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரை குறித்த நேரத்தில் நடத்த முடியாது என்பதால், அத்தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றின அச்சுறுத்தலினால் ஒலிம்பிக், விம்பிள்டன், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதாக ஐசிசி திட்டமிட்டிருந்தது. தற்போது பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், வீரர்களும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கான நேரம்….! ”7am TO 7pm” முதல்வர் உத்தரவால் குஷியோ குஷி …!!

தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர  பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லா இடத்துலயும் வாங்கிக்கோங்க…..! மகிழ்ச்சியான அதிரடி அறிவிப்பு …!!

ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வேதுறை அறிவித்திருக்கிறது. ரயில் சேவை என்பது கிட்டத்தட்ட தொடங்கி இருக்கக் கூடிய நிலையில் அந்த டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மட்டும்தான் பெறக்கூடிய முறை இருந்து வருகிறது. இது நிறைய பேருக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்கிய முடியாத நிலை இருந்து வருவதால் அதனை சரிசெய்வதற்காக இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட்களை நேரடியாகவே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசே கஷ்டத்துல இருக்கு…! ”புதுசா யாரையும் எடுக்காதீங்க” அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது. கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது  என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி…! ”134 கர்ப்பிணிகள் பாதிப்பு” திணறடிக்கும் கொரோனா…!!

சென்னையில் மட்டும் 134 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் 134 கர்ப்பிணிகள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எழும்பூரில் இருக்கும் தாய் சேய் நல மருத்துவமனையில் 64 கர்ப்பிணிகள் அங்கு சிகிச்சையில் இருந்தார்கள், அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் 34 கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். மவுண்ட் ரோடில் இருக்கக்கூடிய கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 55 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்ததில் 32 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் அன்பழகன் தகவல்!!

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கு அனுமதி உண்டு….”நிபந்தனைகள் பல இருக்கு” முதல்வர் அதிரடி உத்தரவு ….!!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி சின்ன துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்தனர். அதற்குப் பின்னர் 2 நாட்களுக்கு முன்பு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியும் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதில், முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் உள்ள அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று10 மணிக்கு தொடங்குறோம்….! அதிரடி காட்டும் ரயில்வே துறை ….!!

இன்று காலை 10 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகின்றது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கு வருகின்ற மே 31ம் தேதி முதல் நிறைய இருக்கிறது. இதனிடையே பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து சேவை, ரயில் சேவை, விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தன. பிற நாடுளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ”மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை” மத்திய அரசு தகவல் …!!

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடரும் என விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பிரச்சனை மற்றும் ஊரடங்கு காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு விதமான போக்குவரத்துகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி சத்தமில்லாமல் அழிக்கப்படுகிறது அமேசான் காடுகள்!!

உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

55 நாட்களுக்கு பிறகு கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கியது… தொல்லியல் துறை!!

கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”ஜூன் 1 முதல் பயணிகள் ரயில் இயக்கம்” மத்திய அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு என்பது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.அதில், வருகிற […]

Categories
மாநில செய்திகள்

தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம்: மின்சார வாரியம்!!

தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]

Categories
மாநில செய்திகள்

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து!!

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு …!!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக  உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. சென்னை முழுவதும் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இந்த நிலைமைதான். இப்போது சென்னை அம்மா உணவகத்திற்க்கென்ற ஒரு அறிவிப்பை அமைச்சர் எஸ் பி வேலுமணி  வெளியீட்டு இருக்கின்றார். சென்னையில் உள்ள 407 […]

Categories
தேசிய செய்திகள்

85 % ஏற்கிறோம்னு சொன்னீங்க….! எல்லாம் பொய் தானா ? அம்பலமாக்கிய ரயில்வே …!!

3.5 லட்சம் தொழிலாளர்களிடம் ரூ. 69 கோடி கட்டணமாக ரயில்வே வசூலித்தது தெரியவந்துள்ளது. சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத புலம்பெயர் தொழிலாளர் களுக்காக, கடந்த 12-ந் தேதி முதல்ராஜதானி வழித்தடங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின றன. தில்லிக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில்களில் ராஜதானி ரயிலுக்குஉரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், மே 12 முதல்16 வரை 5 நாட்களில், ராஜதானி ரயில்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 634 பேர், அவரவர் சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: ”ரூ. 67,000,00,00,000” மொத்தமாக அள்ளிய அம்பானி …!!

கொரோனா பாதிப்பு காலத்தில் 4 வாரத்தில் ரூ. 67,000 கோடி அள்ளினார் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இந்திய மக்களும் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், இந்தியாவின் முதற் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கஜானாவுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை. அம்பானிக்குச் சொந்தமான “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” பங்குகளில், உலகின்முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்து வருகின்றன. ஏப்ரல் 22 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை – முதல்வர் நாராயணசாமி ….!!

நாளை புதுவையில் மதுக்கடைகளை திறக்காது என்றேனு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடியது. இதில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனால் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அமைச்சரவை முடிவு அனுப்பப்பட்ட பொது மதுவுக்கான கலால் வரி நிலுவையில் உள்ளதால் ஆளுநர் ஒப்புதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ”ரூ.1000 அபராதம்” தெலுங்கானா அரசு அதிரடி …!

தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா மாநிலம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில்,  நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது ஊரடங்கு தொடங்கும் என்று தெரிவித்ததோடு, பல்வேறு தளர்வுகள் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தளர்வுகள் குறித்து மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்… தந்தையோடு வந்த 13 வயது சிறுமி …!!

காயமடைந்து தந்தையை ஹரியானாவில் இருந்து பீகார் வரை சைக்கிளில் அழைத்து வந்த 13 வயது சிறுமியின் செயல் ஆச்சரியமடைய வைத்துள்ளது. கொரோனாதடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு திடீரென ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு கட்டத்தில் அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் நடைபயணமாகவும்,  சைக்கிளிலும் செல்லத் தொடங்கினர். இதேபோல தனது தந்தையை சைக்கிளில் வைத்துக் கொண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் ….!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம்: மத்திய உள்துறை கடிதம்!!

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி […]

Categories
அரசியல்

திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சருடன் ஆலோசனை …!!

தமிழகத்தில் திரையரங்கம் திறப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் திரையரங்குகள் இப்போது செயல்படாமல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் திரையரங்க தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையிலிருந்து திரையரங்குகளை இயக்குவது குறித்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூடம் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வமும், உதயகுமார், ஆர்கே செல்வமணி ஆகியோர்  பங்கேற்றுள்ளனர். இதில் திரையரங்குகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும். தனி […]

Categories
மாநில செய்திகள்

படப்பிடிப்பு பணிகளை துவக்குவது குறித்து தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை!!

திரையரங்குகளை திறப்பது மற்றும் படப்பிடிப்புகளை துவக்குவது ஆகியவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தற்போது தம்மை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொறுமையா வாங்க…… ”பொருளோடு போங்க” ஆனந்த தாண்டவம் ஆடும் மதுபிரியர்கள் …!!

தமிழகத்தில் உள்ள மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில் தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலர்களில் வண்ண அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்!!

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு வழிமுறைகள் என்னென்ன ? மத்திய அரசு வெளியிட்டது …!!

ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சலூன் கடைகளை திறக்கலாம் – மத்திய அரசு அனுமதி ….!!

நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பேருந்து இயங்கலாம் – உள்துறை அமைச்சகம் அனுமதி ..!!

நாடுமுழுவதும் போக்குவரத்து சேவையை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலோடு மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சொல்லியது போலவே இந்த முறை ஊரடங்கும், அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு பக்கம் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பின் மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலத்தை நிர்ணயம் செய்வதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. ஊரடங்கில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் …!!

நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: நாடு முழுவதும் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு ….!!

நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது தகவலாக கிடைத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் என்னென்னெ தளர்வுகள் ? முழு விவரம் உங்களுக்காக …!

தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிப்பு விடுத்துள்ளது. 1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதி இல்லை. 2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. 3. பொதுமக்கள் அதிக […]

Categories
அரசியல்

31ஆம் தேதி வரை ஊரடங்கு….! ”உத்தரவு போட்ட முதல்வர்” பல்வேறு தளர்வுகள் …!!

தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை சில தளர்வுகள் உடன் மே 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொது முடக்கம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரை முறைகளுடன் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாருக்கு தளர்வு ? யாருக்கு இல்லை ? உங்க மாவட்டம் உண்டா ….!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TN e-Pass இல்லாமல் பேருந்து இயக்க அனுமதி …. முதல்வர் அதிரடி உத்தரவு …!!

வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள பணிகளுக்கு அனுமதி. திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி. 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-Pass இல்லாமல் இயக்க அனுமதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். ஆகவே இன்றோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடித்து மே 31ம் தேதி வரை  ஊரடங்கு தொடரும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்திருக்கின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால் […]

Categories

Tech |