கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். […]
