இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
