தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் இரவு நேர […]
