கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன. பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]
