திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில், நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றி வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 24 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒரு தளர்வும் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ,ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று […]
