சென்னை சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க அறக்கட்டளை திருமண மண்டபத்தில் 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், வளையல் அணிவித்து சீர்வரிசை வழங்கினர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கர்ப்பிணிகள் கவுரவிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மிக அவசியம். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் விவரங்கள் மாநிலம் […]
