அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் கலெக்டர் தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கி வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் திவ்யதர்சினி உறுதிமொழியில் வாசித்ததாவது “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக […]
