தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் […]
