ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று காலை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. […]
