நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இதனை அடுத்து போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது. […]
