ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடும் தொகையை கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை குறைக்கவும் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சமீபத்தில் கச்சா எண்ணெய் உச்சவரம்பு விலையை நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் சேர்ந்து கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக இந்தியா பதிலளித்தது. இந்நிலையில், […]
