பாம்பு கடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக விஷமுள்ளவைகளில் புலி பாம்பும் ஒன்றாகும். இந்த பாம்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை கடித்துள்ளது. இதனையடுத்து அவன் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் அவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பாம்பு கடியிலிருந்து மீண்டு வருகிறான். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அதிகமாக இவ்வகை பாம்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் புவியியல் […]
