Categories
உலக செய்திகள்

“சுக்குநூறா நெருங்கிய தொலைக்காட்சி கோபுரம்”…. ஆவேசத்தில் ரஷ்ய படைகள்…. அதிகரிக்கும் உயிர் பலிகள்….!!

தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரானது எப்பொழுது முடிவுக்கு வரும் என்று அனைத்து நாடுகளும் கவலைப்படும் இவ்வேளையில் ரஷ்யப் படைகள் நாளுக்குநாள் தங்களுடைய தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். இந்த தாக்குதலால் உக்ரேனில் பல நகரங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மேலும் ரஷ்ய படையினர் உக்ரைனில் வான் வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஆஹா….!! என்ன அதிசயம்…. 20 அடி உயர்ந்த ஈபிள் டவர்…. இது எப்படி சாத்தியம்….?

ஈபிள் கோபுரத்தின் உச்சியில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் ரேடியோ ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. பாரிஸ் நாட்டில் 1889 ஆம் ஆண்டு ஈபிள் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இந்த கோபுரத்தை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரிஸ் நாட்டிக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் 1063 அடி உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஆன்டெனா பொருத்தப்பட்டதன் மூலம் அந்நாட்டில் வானொலி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஈபிள் கோபுரத்தின் […]

Categories
உலக செய்திகள்

பார்க்கிற இடமெல்லாம் புழுதி…. கோரதாண்டவம் ஆடும் செலியா…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

மணல் புயல் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மணல் புயல் வீசி வருகிறது. இது சகாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வருகிறதாம். இந்த மணல் புயலுக்கு செலியா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்களும் அவதிக்குள்ளாயினர். இதனால் மாட்ரிட் நகரம் முழுவதும் புழுதி படிந்துள்ளது. மேலும் அங்குள்ள வாகனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் புழுதியாக காணப்படுகின்றது. இதனை அங்குள்ள மக்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

“இங்க இருந்து தப்பித்தால் போதும்”…. பயணத்தில் உக்ரைன் அகதிகள்…. வழியில் காத்திருக்கும் ஆபத்துகள்….!!

உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு உதவ நினைத்த பெண் மருத்துவர்…. ரஷ்ய துருப்புகளால் அரங்கேறிய கொடூரம்….!!

ரஷ்யா படையினர் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய பெண் மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 31 வயதான வலேரியா என்னும் இளம் பெண் மருத்துவர் உக்ரைனிலேயே தங்கி இருந்து ரஷ்யப் படைகளால் பாதிப்புக்குள்ளானவர்ளுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தார். இவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயாருடன் தங்கியிருந்தார். இதனையடுத்து தனது தாயாருக்கு தேவைப்படும் மருந்து உக்ரைனின் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்.  இதனைத் தொடர்ந்து காரில் தனது தாயாருடன் […]

Categories
உலக செய்திகள்

மீளமுடியாத கடனில் சிக்கியவரா….? உயிரை காவு வாங்கும் விளையாட்டு…. ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்….!!

ஸ்குவிட் கேம் போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொழுதை போக்கியுள்ளனர்.  சவுதி அரேபிய நாட்டின் தலைநகர் ரியாத் ஆகும். இங்கு  ஆண்டு தோறும்  கேளிக்கை திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில்  ஸ்குவிட் கேம் எனும் இணைய தொடரை மையமாகக்கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த கேளிக்கை திருவிழாவில் மக்கள் அனைவரும்  அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இதில் கடன் சுமையில் சிக்கியவர்கள் பணத்திற்காக தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் விளையாடும் ஆபத்தான போட்டிகளை […]

Categories
உலக செய்திகள்

“இது சட்டத்திற்கு புறம்பான செயல்”…. தடம்புரண்ட ரயிலால்…. அதிகரிக்கும் உயிர் பலி….!!

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தெற்கு லுவாலாபா என்னும் மாகாணத்தில் காங்கோ எனும் இடம் அமைந்துள்ளது.  இங்கு கடந்த  வியாழக்கிழமை அன்று  சரக்கு ரயிலில் சட்டவிரோதமாக பொதுமக்கள் ஏறிச் சென்றுள்ளனர். அந்த ரயில் கின்டேட்டா என்னும் இடத்தை அடைந்த போது  திடீரென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.  மேலும் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

“இலக்கை மாற்றிய ரஷ்யா”…. உயிரிழந்த உக்ரைன் வீரர்கள்…. வருத்தம் தெரிவித்த அதிபர்….!!

ரஷ்யா நடத்திய போரில் உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்து இன்று 19வது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது. உக்ரைனின் ராணுவ தளங்களை அழிப்பது மட்டுமே தனது இலக்காக வைத்து ரஷ்யா இந்த போரை தொடங்கியது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என்று பல்வேறு இடங்களில் தனது தாக்குதல்களை ரஷ்ய படைகள் அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்…. 81 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி காட்டிய சவுதி அரசு….!!

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு. சவுதி நாட்டில் இன்றளவும் மரண தண்டனை விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று  ஒரே  நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.  இந்த மரண தண்டனையானது  தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது  தூக்கில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“விண்வெளியில் செலுத்தப்பட்ட ராக்கெட்”…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!

ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி…. 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு இங்கிலாந்து தடை….!!

உருமாறிய கொரோனா பரவலை தொடர்ந்து இங்கிலாந்து அரசு 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று குறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த கொரோனாவின் அறிகுறிகள், பரவும் வேகம், தடுப்பூசி முறைகள், போன்றவை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாக அறியப்படவில்லை. எனவே இந்த வைரஸ் பரவல் குறித்து இங்கிலாந்து அரசு தீவிரமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

16 வயதான நடிகைக்கு…. 20 வயது காதலன்…. பிரபல நாட்டில் சர்ச்சைகுள்ளான சம்பவம்….!!

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது பெண் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது நடிகை ஹனி பூ பூ. இவர் 20 வயதாகும் தனது காதலன் ட்ரோலின் கார்வேல்ஸ் உடனிருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் 16 வயதுள்ள  பெண் 20 வயதாகும் ஒருவரை டேட்டிங் செய்வதால் சமூகவலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து “தன்னைவிட 4 வயது மூத்தவரையா […]

Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தால்…. விமான சேவை தொடக்கம்…. இஸ்ரேல்- அரபு நாடுகளின் முடிவு….!!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிற்கு, பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதியை  உருவாக்க கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் இஸ்ரேல் ஆனது ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொரோகோ போன்ற நாடுகளுடன் அமைதி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேல் தூதரகமானது […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. 20 கோடியை கடந்தது…. வெளியான தகவல்கள்….!!

உலக அளவில் சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது உலக அளவில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல்…. கட்டுப்படுத்த தீவிர முயற்சி…. பிரபல நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு….!!

கொரோனா பரவல் தொடர்பாக ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. அதாவது நியூசிலாந்தில் ஆக்லாந்து என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆத்திரமடைந்த பிரான்ஸ்…. நட்பு நாடுகளுடனான உறவு துண்டிப்பு…. வெளியான தகவல்கள்….!!

நட்பு நாடுகளுடனான உறவை பிரான்ஸ் அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நட்பு நாடுகளுடனான உறவை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரான்ஸ் தங்களது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்தோ-பசிபிக் முத்தரப்பு ஒப்பந்தத்தையும் செய்துள்ளனர். அதாவது நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு பல தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்குமா….? ஆலோசனை நடத்த முடிவு…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் தான்  கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. மேலும் அது தடுப்பூசி தொடர்பான ஒட்டுமொத்த செய்திகளையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியுள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து செய்திகளையும் அனுப்பியுள்ளது. அது என்னவென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன் மற்றும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் […]

Categories
உலக செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பு…. ஒரு குழந்தை பலி…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட  சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பு தகவல்  தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து  அந்நாட்டை […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்களின் வரி பணத்தில்…. ஏற்பாடு செய்யப்பட்ட விமானம்…. பிரபல நாட்டில் எழும்பிய எதிர்ப்புகள்….!!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் தனி பயணிகள் விமானம் பொதுமக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒரு நபரை மட்டும் நாடு கடத்துவதற்காக 14 ஊழியர்கள் மற்றும் 218 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவானது அந்நாட்டு பொது மக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்துள்ளதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபரேஷன் எஸ்பார்டோ என்ற பெயரில் நாடு கடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஊரடங்கு…. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்…. மிளகு தெளிப்பானை பயன்படுத்திய போலீசார்….!!

கொரோனா ஊரடங்கிற்கு எதிராக திரண்ட மக்களை கட்டுப்படுத்த போலீசார் மிளகு தெளிப்பானை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பல பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு சுற்றுலா சென்றவர்கள்…. பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல்…. இணையத்தில் வெளியான வீடியோ….!!

விண்வெளிக்கு பயணம் செய்த 4 பேர் கொண்ட குழு மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு நான்கு பேர் கொண்ட குழு பால்கன்-9 ராக்கெட்டில் பயணம் செய்துள்ளனர். அதாவது இந்த பயண திட்டத்தை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் தொடங்கியுள்ளார். மேலும் இந்த பயண திட்டத்திற்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயர் வைத்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த திட்டமானது  சாதாரண மக்களை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளுடனான உறவு துண்டிப்பு…. பேச்சுவார்த்தை நடத்திய பிரான்ஸ் அதிகாரிகள்…. வெளியான தகவல்கள்….!!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை துண்டிப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை சீனாவை அடக்குவதற்காக தொடங்கியுள்ளது. இந்த அமைப்பின் பெயரானது மூன்று நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை தவிர்த்து பின்னர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த மூன்று நாடுகளும் இணைந்து இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்…. பிரித்து வரலாறு படைத்த மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

இரட்டை தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்த இந்திய மருத்துவர் ஜிலானிக்கு பாராட்டுகள் குவிகின்றது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜிலானி என்பவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஆவார். மேலும்  இவர் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் மருத்துவாராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் அவரது உதவியை கேட்டுள்ளனர். அதாவது இஸ்ரேல் நாட்டில் இரட்டை தலையுடன் ஒட்டி குழந்தைகள் பிறந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை உயர்வு…. பிரபல நாடு தான் காரணம்…. வெளியான உண்மை தகவல்கள்….!!

பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் இன்னும் இரண்டு வார காலத்தில் பிரித்தானியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சமையல் எரிவாயுவின் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக Gazprom நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழுவும் சிக்கலை சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

மகளிர் நல அமைச்சகம்…. புதிய பெயர் சூட்டிய தலீபான்கள்…. பாதிக்கப்படும் ஆப்கான் பெண்கள்….!!

தலீபான்கள் பெண்கள் நல அமைச்சகத்தை கலைத்து அதற்கு பதிலாக பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் என புதிய பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி  ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பெண்ணுறுப்பு சிதைப்பு விவகாரம்…. மறு விசாரணைக்கு வந்த வழக்கு …. வசமாக சிக்கிய மருத்துவர்கள்….!!

பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் மருத்துவர் Jumana Nagarwala வசித்து வருகின்றார். இவர் 7 வயதுடைய ஒன்பது சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. அப்போது பெடரல் நீதிபதி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விவகாரம் குறித்த நடைமுறையை தடை செய்யும் திட்டம் அரசியல் […]

Categories
உலக செய்திகள்

சொத்துக்கள் தொடர்பாக…. மீண்டும் ஆலோசனை செய்ய வேண்டும்…. வலியுறுத்திய பிரபல நாட்டு ஜனாதிபதி….!!

ரஷ்யாவின் ஜனாதிபதி ஆப்கானிஸ்தான் சொத்துக்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடன் வைத்திருந்த பொருளாதார உறவை துண்டித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டின் சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.  இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் சொத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடந்த கொடூரம்…. இரண்டு பேர் பலி…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

நெதர்லாந்தில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாட்டில் உள்ள நெதர்லாந்தில் Almelo என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ” இந்த கத்திக்குத்து சம்பவம் நெதர்லாந்தில் உள்ள Almelo நகரின் M.th. Steynstraat-ல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதாவது காயமடைந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் நடந்த செயல்…. பிரதமரின் அதிரடி நடவடிக்கை…. பறிபோன அமைச்சரின்பதவி….!!

சிறைசாலையில் கைதிகள் இருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இலங்கை அமைச்சரின் பதவி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் அனுராதபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் சிறைச்சாலை ஓன்று உள்ளது. அதனை பார்வையிட கடந்த 12 ஆம் தேதி அந்நாட்டு ஜெயில்களின் இணையமைச்சராக பணியாற்றிய லோஹன் ரத்வத்தே சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அழைத்துள்ளார். அதன்பின் அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் இலங்கை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் புதிய அரசாங்கம்…. தலீபான்களை விமர்சிக்க வேண்டாம்…. வலியுறுத்திய பிரபல நாட்டு பிரதமர்….!!

பெண்களின் உரிமைகள் குறித்து தலீபான்களை விமர்சிக்க வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய அரசாங்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

உணவில் கட்டை விரல்…. அதிர்ச்சியடைந்த பெண்…. உத்தரவிட்ட பொலிவிய அரசு….!!

உணவில் கட்டை விரலை வைத்து பரிமாறிய உணவகத்திற்கு பொலிவிய அரசு அபராதம் விதித்துள்ளது. பொலிவியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பர்கரை ஆர்டர்  செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பர்கரை சாப்பிடுவதற்காக வாயில் வைத்த பொழுது ஏதோ தட்டுபட்டுள்ளது. உடனே அவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இருந்தது ஒரு மனிதனின் கட்டைவிரல் ஆகும். இதனை அந்த பெண் அங்கிருந்த உணவக ஊழியரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அதிகாரிகளின் வீடுகளிலிருந்து…. வங்கிக்கு வந்த பெருந்தொகை…. வெளியான தகவல்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து அங்குள்ள மத்திய வங்கிக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதாவது தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது. அதாவது தலீபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுக்காக பல சிரமங்களை […]

Categories
உலக செய்திகள்

சாதாரண மக்களும் செல்லலாம்…. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சாதனை…. நாசா வெளியிட்ட அறிவிப்பு….!!

விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழு தொழிலதிபர் ஜாரிட்  ஐசக் மேன் தலைமையில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவில் கென்னடி விண்வெளி மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் நான்கு சாதாரண மக்களுடன் புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தொழிலதிபர் ஆலன் மஸ்க்கின் நான்கு சாதாரண மக்களை கொண்ட ஒரு குழுவை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த மக்கள்…. 60 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி…. பாராட்டி பேசிய பிரபல நாட்டு ஜனாதிபதி….!!

ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier  அந்நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை அளவிட முடியாது என மனதார பாராட்டியுள்ளார். ஜேர்மனில் துருக்கி நாட்டவர்கள் பணி செய்வது குறித்து ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதி  Frank-Walter Steinmeier உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டிற்கு புலம்பெயர்ந்தோரின் துருக்கிய குடும்பங்களை நான் மனதார பாராட்டுகின்றேன். மேலும் அவர்கள் எங்கள் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

தலைவரை சிறைபிடித்த ராணுவம்…. விசாரணைக்கு வந்த வழக்கு…. உடல் நலக்குறைவால் ஒத்திவைப்பு….!!

மியான்மர் நாட்டின் தலைவரை பல்வேறு காரணங்களால் ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்துள்ளது . மியான்மர் நாட்டின் தலைவரையும் அதிபரையும் அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்துள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு விரோதமாக இறக்குமதி செய்து வைத்துள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

மூன்றாவது திருமணத்திற்கு…. தயாரான பிரபல நாட்டின் பாடகி…. இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்….!!

அமெரிக்காவின் சிறந்த பாடகி ஒருவர் அவருடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறந்த பாடகி பட்டியலில் இடம் பிடித்தவர் 39 வயதுடைய பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நெருங்கிய நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை மணம் முடித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த 55 நிமிடத்திலேயே இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது தனது செயல் குறித்த புரிதல் அவருக்கு இல்லை […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்ட நபர்…. அதிரடி விசாரணையில் போலீசார்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால்  குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 31 வயதுடைய நபரை […]

Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானம்…. 4 பேர் பலியான சோகம்…. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக அது தரையிறங்கிதையடுத்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரிலிருந்து எல் -410 என்னும் ஒரு சிறிய ரஷ்ய பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது. அதில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தீடிரென அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் சைபீரியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

NHSன் புதிய சோதனை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…. உயிர்களை காக்க முயற்சி….!!

மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்க்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. பிரித்தானியாவில் மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. அதாவது விஞ்ஞானிகள் ‘கேலரி’ என்ற  இரத்த பரிசோதனை மூலம் 50க்கும் அதிகமான புற்றுநோயை  கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  இந்த இரத்த பரிசோதனை மூலம் மருத்துவ அறிகுறிகள் காண்பிக்கப்படுவதற்கு முன்பே மிகவும் துல்லியமாக புற்றுநோயை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சிக்கிய கப்பல்…. சூயஸ் கால்வாயில் பரபரப்பு…. மீட்கும் பணி தீவிரம்….!!

சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அந்த கால்வாய்தான் உலகிலேயே மிக பெரிய கால்வாய் ஆகும். அந்த கால்வாயில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அதிகாரிகள் கூறியதாவது “எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் அந்த கப்பல் கால்வாயில் 54 கி.மீ தூரத்தில் மாட்டியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நான்கு  […]

Categories
உலக செய்திகள்

இலவச வைஃபையை பயன்படுத்த வேண்டுமா….? புதிரை கண்டுபிடியுங்கள்…. உணவகத்தின் சவால்….!!

இலவசமாக வைஃபையை பயன்படுத்த வேண்டுமானால் புதிரை கண்டுபிடிக்க வேண்டும்  என ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. உலகம் முழுவதுமே இன்று டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் இணையதளம் இல்லாமல் எதுவுமே முடியாது என்ற நிலையும் உருவாகியுள்ளது. அதாவது சாப்பிடுவதில் தொடங்கி காய்கறி வாங்கும் வரை அனைத்துமே இணையதளம் மூலம்தான் நடைபெறுகின்றது. இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இலவசமாக வைஃபை கிடைக்கும் என்றால் நமக்கு வேறென்ன சந்தோசம் வேண்டும். இதனையடுத்து உணவகங்கள் மற்றும் மக்கள் செல்கின்ற பல […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பிரதமர் பெயர் அறிவிப்பு…. தலீபான்களுக்கு எதிராக செயல்பட்ட…. பத்திரிக்கையாளர்கள் 5 பேர் கைது….!!

தலீபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வாக்குறுதிகளை மதிக்கத் தவறிய தலீபான்கள்…. எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்…. வெளியான தகவல்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய ஆட்சியில் தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மதிக்க தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களின் அமைச்சரவையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் அல்லது  தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலீபான் அல்லாதவர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானுக்கு உதவ தயார்…. பிரபல நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி…. வெளியான தகவல்கள்….!!

ஜேர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஜேர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஆவார். அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் உதவ தாயாராக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியதற்கு அந்நாட்டு மக்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. இதன் காரணமாக ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்…. துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. 2 பேர் பலியான சோகம்….!!

பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை நோக்கி தலீபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து  ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான செயல்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது தலீபான்களின் […]

Categories
உலக செய்திகள்

பூமியை கண்காணிக்க…. விண்ணில் செலுத்தப்பட்ட ‘காபென்5-02’…. சீனாவின் புதிய முயற்சி….!!

பூமியை கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் ஓன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது பூமியில் நடப்பவற்றை கண்காணிப்பதற்காக புதிய செயற்கைக் கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட அந்த செயற்கைக் கோளின் பெயர் ‘காபென்5-02′ ஆகும். இதனையடுத்து அந்த செயற்கைக்கோள் பூமியின் உருண்டையான வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளின்  கண்காணிபுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக சீனா […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் புதிய ஆட்சி…. அங்கீகரிப்பதில் பிரபல நாட்டின் முடிவு…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்….!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலீபான்களின் புதிய ஆட்சியை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது இழுபறியாக இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக ஆட்சியை அமைத்துள்ளனர். அந்த ஆட்சியில் தலைவாராக முல்லா முகமது ஹசன் அகண்ட்டும் துணைத்தலைவராக முல்லா பரதரும் வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாவும் உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் மற்றும் பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தலீபான் செய்தி […]

Categories
உலக செய்திகள்

பயணிகள் உரிமையில் மாற்றம்…. அமலுக்கு வந்த நாள் முதல்…. இழப்பீடு கேட்டு குவிந்த மனுக்கள்….!!

பயணிகள் உரிமையில் பொதுப் போக்குவரத்து துறை ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதால் சுவிட்சேர்லந்தில் இழப்பீடு கேட்டு மனுக்கள் குவிந்துள்ளது.   ஸ்விட்சர்லாந்து பொதுப் போக்குவரத்து துறை பயணிகள் உரிமையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த புதிய மாற்றமானது கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாற்றம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கால கட்டங்களுக்கு இடையில் 8600 மனுக்கள் இழப்பீடு கேட்டு போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

மகளை தீயிட்டு கொளுத்திய தந்தை…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….பிரபல நாட்டில் பரபரப்பு….!!

துருக்கியில் தந்தையே தனது மகளை உயிருடன் தீயிட்டு கொளுத்திய ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டில் அஹ்மத் முகமது த்வாலா என்ற தந்தை ஒருவர் தனது 13 வயதுடைய மகளான அமரா த்வாலா என்பவரை குளியல் அறையில் உயிருடன் கொளுத்தி விட்டு மாயமாகியுள்ளார். அந்த சம்பவத்தின் போது அமரா த்வாலாவின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வீட்டில் பாட்டு சத்தத்தை அதிக அளவில் ஒலிக்க வைத்துள்ளார். அதன்பின் தனது இன்னொரு 12 வயதுடைய மகளுடன் […]

Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடனின் மகன்…. செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி…. வெளியான தகவல்….!!

ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் ஆவார். அவர் இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது தந்தை இறந்த பிறகு அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு நான் வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது தந்தை பிள்ளைகளை விரும்புவதை விட […]

Categories

Tech |