குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த மாதங்களில் இங்கு குளிர் காற்று வீசும் நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்கு இருக்கின்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனாலும் இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு […]
