27 வருடங்களுக்கு முன்பாக உறைய வைக்கப்பட்ட கருவை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் டினா- பென் கிப்சன். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கிடைத்த தகவலின் மூலம், அமெரிக்காவிலுள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த தேசிய கரு தான மையத்தில் சுமார் 10 லட்சம் பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து […]
