மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுமியின் உடலில் உள்ள உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 8ஆம் தேதி திடீர் என்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் செரிபரல் ஒய்டிமா எனப்படும் மூளை செயல்பாடு பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். […]
