அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது, அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது. […]
