தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள், தடுப்பூசி மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீப நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஆஸ்திரிய நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாற்றமடைந்த கொரோனா தொற்றை கண்டறிந்திருக்கிறார்கள். […]
