உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 10 1/2 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் நெல்மூட்டைகள் இருந்தது. அப்பொழுது போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தார்கள். அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி, நாகமங்கலத்தைச் சேர்ந்த […]
