சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் பார்சல் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லாரியில் ரேஷன் அரிசி […]
