திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்குமாறு முதல்வரை சந்தித்து நேரில் கோரிக்கை விடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு மாநிலங்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவையும் […]
