திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. அங்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதற்கு தேவையான உரங்களைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் பெற்று சாகுபடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வாங்க செல்லும் விவசாயிகளிடம் பிற நுண்ணூட்ட உரங்கள் வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் என்று உர கடைக்காரர்கள் வலுக்கட்டாயமாக […]
