வேளாண் சங்கம் சார்பில் முறையாக உரம் வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி ஊராட்சியில் கூட்டுறவு வேளாண் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்கப்படாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுவாதாக விவசாயிகள் புகார் அளித்து வந்துள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் கமுதி-அருப்புகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த துணை […]
