வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் கொரோனா மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 40 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பெற்று வந்தார். இந்நிலையில் மேல் மருத்துவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆரம்ப […]
