ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உயிர்வாழ்சான்றிதழை பதிவுசெய்வதற்கான வழிகாட்டுமுறைகள் என்ன..? என்பது பற்றி மாநகராட்சியானது வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருடந்தோறும் ஜூலை -செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனிடையில் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமாண் செயலி வாயிலாக மின்னணு அந்த சான்றிதழை அளிக்கலாம். இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவை வாயிலாக ரூபாய் 70 செலுத்தி வீட்டில் […]
