கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரதபள்ளி மடத்துவிளை பகுதியில் புஷ்பா பாய் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற கணவரும், 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த பெண்மணி கடந்த 9-ம் தேதி தாமிரபரணி ஆற்றுக்கு துணி துவைத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் புஷ்பா அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பிறகு புஷ்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை […]
