திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் சிதம்பரமும், ராஜம்மாளும் 4-வது மகனான கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகுந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் சில தினங்களுக்கு முன்பு தவறி […]
