வேலைக்கு சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துபட்டணம் கிராமத்திற்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சென்ரிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலு கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த பாலுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
