அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த முயற்சியில் ஆசிரியர் ஒருவர் ஆய்வகம் அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் எழுத்துத் திறன் குறைவாக இருந்ததை அறிந்த பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் […]
