திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் திரு. வி. சக்திவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் திரு. எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட […]
