ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை […]
