பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய மத்திய […]
