கனடா அரசு, தங்கள் நாட்டில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு உயரிய கவுரவ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களான பர்மிந்தர் ரெய்னா, அஜய் அகர்வால் ஆகிய இருவருக்கு Order of Canada என்ற உயரிய கௌரவ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை 1967 ஆம் வருடத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார். இந்த உயரிய கௌரவ விருதானது, சமுதாயத்திற்கான சேவைகள் மற்றும் கற்பனைகளை உண்மையாக்கும் கண்டுபிடிப்புகள், சமூகத்தை ஒன்றிணைக்கும் இரக்கம் உடையவர்களை பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. […]
