டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]
