விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள். இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உப்பளம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்பு எட்டப்பட்டுள்ளது. உப்பு ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கொரோனா தொற்று அச்சத்தால் வேலைக்கு ஆட்கள் செல்லாத சூழல் நிலவி வருகிறது. மேலும் உப்பின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் 250க்கும் […]
