கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்தவர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர். இவரும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் உத்பாலுக்கு, நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. […]
