உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை அமைந்துள்ளது. இந்த எடை மேடையின் பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். […]
